அண்ணாநகர்: சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை தெருவை சேர்ந்தவர் நாசர் (47), தினமும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஆப்பிள் பழங்களை பெட்டிகளில் வாங்கி வந்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (43) என்பவர் ஜம்மு காஷ்மீரிலிருந்து ரூ.32 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் வாங்கி நாசரிடம் விற்று தரும்படி கொடுத்துள்ளார். ஆப்பிள் பழங்களை வாங்கி விற்பனை செய்து ரூ.6 லட்சம் பணத்தை மட்டும் ராஜேஷ்குமாரிடம் நாசர் கொடுத்து விட்டு மீதி ரூ.26 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.