புழல்: சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயன் (70). இவரது மனைவி மகேஸ்வரி (68). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். விஜயன் கட்டிட தொழிலாளி. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் இவர்கள் தூங்கியபோது திறந்து கிடந்த வீட்டுக்குள் 3 மர்ம ஆசாமிகள் திடீரென புகுந்துள்ளனர். இதில், மகேஸ்வரி கழுத்தில் கத்தியை வைத்து பீரோவில் இருந்த நகைகளை எடுக்கச் சொல்லி மிரட்டி உள்ளனர்.