வாஷிங்டன்னில் பல்பொருள் அங்காடியில் 3 பேர் சுட்டுக்கொலை: 21 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அடையாளம் தெரிந்தது

வாஷிங்டன்: அமெரிக்காவின்  கலிபோர்னியாவில் 9 பேர் சுட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் வாஷிங்டனில் இன்று அதிகாலை 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. வாஷிங்டன் நகரில் உள்ள யாஹிமா என்ற இடத்தில் இன்று அதிகாலை பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். 21 பேரை அந்த நபர் சுட்டதில் 3 பேர் நிகழ்விடத்திலேயே மரணம் அடைந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். நேற்றுகலிபோர்னியா வில் ஹாப்மூன் பே  இடத்தில் 2 இடங்களில் மக்கள் கூட்டத்தில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில் 2 மாணவர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மர்மநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கி கலாசாரத்திற்கு உடனே முடிவு கட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள கலிபோர்னியா மாகாண ஆளுநர் காவின் நியூசம் துப்பாக்கி உரிமம் சட்டங்களுக்கு நீதிபதிகள் ஆதரவு தெரிவித்திருப்பது வெட்கக்கேடு என்று சாடியுள்ளார். கடந்த 22-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மேன்டே பார்க் நகரில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முதியவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.  

இதில்  11 பேர் உயிரிழந்தனர். 8 நாட்களுக்கு முன்பு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள துலாரே நகரில் ஒரு வீட்டில் 6 மாத குழந்தை தாய் உட்பட 6 பேரை போதைப் பொருள் கடத்தல் கும்பல் சுட்டுக்கொன்றது.  மொத்தத்தில் அமெரிக்காவில் இந்த 2023-ம் ஆண்டு துப்பாக்கி தோட்டா சத்தத்துடனும் அப்பாவி மக்களின் உயிர்பறிப்பு சம்பவங்களுடனும் தொடங்கி இருப்பது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: