ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தேவர்சோலை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் பள்ளிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் மதுபோதையில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். மாணவியை பார்த்த அவர்கள், பாலியல் தொல்லை அளிக்கும் நோக்கத்துடன் சிறுமியை அங்கிருந்து அலெக்காக தூக்கி தோளில் போட்டுக்கொண்டு சென்றனர். சிறுமி பயந்து போய் சத்தம் போட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சிறுமியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.