சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில், மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டன. நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ECR சாலையில் போக்குவரத்து அனுமதியில்லை என போக்குவத்து போலீசார் அறிவித்து இருந்தனர்.