புயல் எதிரொலியால் சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக சேவை பாதிப்பு

சென்னை: புயல் எதிரொலியால் சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியாக நள்ளிரவில் சென்னை வந்த 7 விமானங்கள் ஐதராபாத், பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 20 விமானங்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டு காலதாமதமாக புறப்பட்டுள்ளன. 2வது நாளாக திருவனந்தபுரம், தூத்துக்குடி, திருச்சி, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: