புதுவை- சென்னை இசிஆர் சாலைக்கு சீல்

காலாப்பட்டு: மாண்டஸ் புயல், மாமல்லபுரத்தில் நள்ளிரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி, புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு 7 மணியளவில் மூடி `சீல்’ வைத்தனர்.

புதுச்சேரியில் இருந்து இசிஆர் சாலை வழியாக சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் பெரிய முதலியார்சாவடியில் திருப்பி விடப்பட்டு, மொரட்டாண்டி பைபாஸ் வழியாக அனுப்பப்பட்டது. புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் வரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும், விழுப்புரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: