சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: 1998ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை, மனைநிலத்தை சதுர அடி கணக்கில், அதன் சந்தை விலை மதிப்பில் கணக்கிட்டு வாடகை வசூலிக்க உத்தரவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மனை நிலத்திற்கு 1998க்கு முன்பிருந்தபடி பகுதி முறையில் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.