×

கோயில் மனைகளில் குடியிருப்போர்களுக்கு தீர்வு காண வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: 1998ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை, மனைநிலத்தை சதுர அடி கணக்கில், அதன் சந்தை விலை மதிப்பில் கணக்கிட்டு வாடகை வசூலிக்க உத்தரவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மனை நிலத்திற்கு 1998க்கு முன்பிருந்தபடி பகுதி முறையில் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சதுர அடி கணக்கில் சந்தை மதிப்பில் வாடகை கணக்கிடும் அரசு உத்தரவு 34ஏ ரத்து செய்யப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மூத்த அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக்குழுவினர், கோயில் மனைகளில் குடியிருப்போர் கோரிக்கைகளுக்கு நல்ல தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும்.

Tags : Vijayakanth , Remedy for residents of temple premises: Vijayakanth insists
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...