சென்னை: நாளை நடைபெறவிருந்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வன தொழில் பழகுநர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வன தொழில் பழகுநர் (தொகுதி 4) பதவி நியமனத்துக்கான நாளை நடைபெறும் தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.