மாணவிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

தஞ்சை: தஞ்சையில் 16 வயதான பிளஸ் 1 மாணவி கடந்த 12-8-2021ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். காணாமல் போன மாணவி ஈரோட்டில் உள்ள ஒரு வீட்டில் இருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் போலீசார் ஈரோட்டுக்கு சென்று மாணவியை மீட்டு தஞ்சை அழைத்து வந்தனர். பின்னர் மாணவியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆட்டோ டிரைவர் தஞ்சை மானோஜிப்பட்டி கன்னியம்மாள் நகரை சேர்ந்த பாண்டியன்(25) கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சை  போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று, நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு அளித்தார்.

பாண்டியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

Related Stories: