சென்னை: சென்னையின் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்பு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். ஒவ்வொரு குழுவுக்கும் பொக்லைன் இயந்திரம், 267 மரம் அறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. முடிந்தவரை சேதமின்றி புயலை சமாளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் தெரிவித்துள்ளார்.