அண்ணாநகர்: சென்னை முகப்பேர், எஸ்எம்டி நகரில் ஒரு தனியார் பியூட்டி பார்லர் இயங்கி வருகிறது. இங்கு 5 பெண்கள், 5 ஆண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு, நேற்றிரவு பட்டாக்கத்திகளுடன் 10 பேர் மர்ம கும்பல் திடீரென புகுந்தது. அவர்களை பார்த்ததும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பெண் ஊழியர்களை பட்டாக்கத்தியால் சரமாரியாக தாக்கினர். காயம் ஏற்பட்டது. இதில் பயந்து போன ஆண் ஊழியர்களிடம், நகைகள், பணம், செல்போன்களை தரும்படி மர்ம கும்பல் மிரட்டியது. உடனே 5 சவரன் நகைகள், 10 செல்போன்கள் மற்றும் கல்லாவில் இருந்த ₹15 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்தது. பின்னர் அக்கும்பல் 3 பைக்குகளில் தப்பி சென்றது.