நெல்லை : தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக தென்காசி வந்தார். வழக்கமாக வெளியூர் பயணங்கள் என்றால் விமானம் மற்றும் கார் மூலம் செல்லும் முதல்வர் ேநற்று முதன் முறையாக தென்காசிக்கு ரயில் மூலம் வருகை தந்தார். இதனால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரயில் நிலையம் துவங்கி குற்றாலம் வரையும், குற்றாலம் சுற்றுலா மாளிகையில் துவங்கி விழா நடைபெற்ற வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானம் வரையிலும் பல இடங்களில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.