சென்னை: மாண்டஸ் புயல் கரையை நெருங்கியதற்கான ரெட் அலர்ட் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கும். இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.