பரமக்குடி : செல்பி எடுத்துக் கொண்டே அரசு பஸ்சை இயக்கிய டிரைவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு தினமும் 40க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து முதுகுளத்தூருக்கு அரசு டவுன் பஸ் சென்றபோது, டிரைவர் செல்பி எடுத்துக் கொண்டே பஸ்சை இயக்கினார். இதனை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட வைரலாக பரவி வருகிறது.