செல்பி எடுத்துக் கொண்டே டவுன்பஸ் ஓட்டிய டிரைவர்-வைரலாகும் வீடியோவால் பரமக்குடியில் பரபரப்பு

பரமக்குடி : செல்பி எடுத்துக் கொண்டே அரசு பஸ்சை இயக்கிய டிரைவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு தினமும் 40க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து முதுகுளத்தூருக்கு அரசு டவுன் பஸ் சென்றபோது, டிரைவர் செல்பி எடுத்துக் கொண்டே பஸ்சை இயக்கினார். இதனை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட வைரலாக பரவி வருகிறது.

டிரைவர் செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் போது எதிரே வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருப்பது இந்த வீடியோவில் தெரிகிறது. பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணிக்கும்போது ஆபத்தை உணராமல் செல்பி வீடியோ எடுத்துக் கொண்டு பேருந்து இயக்கிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: