சென்னையில் கனமழை பெய்வதால் வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம்: போக்குவரத்து துறை போலீசார் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் மாண்டஸ் புயலால் காற்றுடன் மழை பெய்வதால் அவசியமின்றி வாகன ஓட்டிகள் வெளியே வரவேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மிக அவசிய காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

சென்னை, திருவள்ளுர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில்  கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை வாகன ஓட்டிகள் மிகவும்  அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் தேவையின் காரணமாக வெளியே வருபவர்கள் குடை பயன்படுத்துவதை தவிர்க்கவும் ஆனால் ரெயின் கோட் பயன்படுத்தவும் என்று தெரிவித்துள்ளது. மரங்கள், பாழடைந்த மற்றும் சேதமடைந்த கட்டிடங்கள், விளம்பர பலகைகள் மற்றும் மின்மாற்றிகளை நிறுத்த நேர்ந்தால் அவற்றை நிறுத்துவதையும் தவிர்க்கவும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories: