திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டாஸ் புயல் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசப்பட்டு வருகிறது. அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. குறிப்பாக, கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு செல்லும் சாலையில் நேற்று இரவு 10-க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளது. அதுமட்டுமின்றி கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.