சென்னை: வங்கக்கடலில் தீவிர புயலான மாண்டஸ் புயலாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் இரவு தீவிர புயலாக மாறியது. மாண்டஸ் புயல் காரணமாக நாகை, கடலூர், காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. துறைமுகம் கடுமையான வானிலையை சந்திக்கக் கூடும் என்பதன் அறிகுறியாக 5ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. இந்நிலையில் தீவிர புயலான மாண்டஸ் புயலாக வலுவிழந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.