சென்னை: வங்கக்கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்ததாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயலாக வலுவிழந்த போதும் அதிகனமழை முதல் மிக கனமழை நீடிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.