திருப்புவனம்: சட்டமன்ற பொது கணக்குக் குழுவினர் கீழடி அகழாய்வு தளத்தை ஆய்வு செய்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிந்துள்ளன. கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 இடங்களிலும் 20 குழிகள் தோண்டப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடம் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் கீழடியில் ரூ.11 கோடியே 3 லட்சம் செலவில் 10 கட்டிடங்களுடன் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியக கட்டிட பணிகள் முடிவடைந்து பொருட்கள் காட்சிக்கு வைக்கும் பணி நடந்து வருகிறது.