துரைப்பாக்கம்: சென்னை செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பத்மினி (35). இவரது மைத்துனி சாவித்திரி (34) பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. சாவித்திரிக்கு 13 வயதில் மகள் உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு மூன்று பேரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பேர் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும், இதை தடுக்க முயன்ற சிறுமியிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பெண்கள் அலறினர். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.