புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவின் வைப்புத் தொகை ₹7.93கோடி மற்றும் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக நடியா மாவட்டத்தில் உள்ள பலஷிபாரா தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மாணிக் பட்டாசார்யா கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.