சென்னை: 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் கடலோரம் வசிக்கும் மக்களுக்கு புயல் குறித்து அறிவிப்புகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. TNSMART செயலி மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் முன்னெச்சரிக்கை செய்திகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறை மூலமாக போக்குவரத்தை சீரமைக்க போதுமான காவலர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.