மதுரை: அரசு நிலங்களில் அனுமதியின்றி வைத்துள்ள அரசியல், சாதி சங்கங்களின் கட்சி கொடி, பேனர்களை அகற்றக்கோரி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல மனு அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சிவகங்கை ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.