டெல்லி: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்காமல் மீண்டும் திருப்பி அனுப்பியது தவறு. ஒன்றிய அரசு மீண்டும் திருப்பி அனுப்பியது உச்சநீதிமன்றம் ஏற்கனவே எடுத்த முடிவுக்கு எதிரானது. சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருந்தாலும் அது நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டதே எனவும் தெரிவித்துள்ளது.