திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற அண்ணாமலையார், உண்ணாமலையம்மனை பக்தர்கள் வழிநெடுகிலும் மாலை அணிவித்து வழிபட்டனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 6ம் தேதி மகாதீபம் ஏற்றப்பட்டதுடன் தீபத்திருவிழா முடிவடைந்தது. இதனை தொடர்ந்து நடந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை மாதம் பவுர்ணமி கிரிவலமானது இன்று தொடர்கிறது. அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் ராஜகோபுரம் முன்பு உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.