முக்கிய செய்தி சென்னை வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 'மாண்டஸ்'புயலாக வலுப்பெற்றது Dec 08, 2022 வங்காள கடல் மண்டாஸ்' சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாண்டஸ் புயலானது புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. புயல் காரணமாக நாளை நள்ளிரவு முதல் காற்றின் வேகம் மணிக்கு 85 கி.மீ வேகத்தில் வீசும் என கூறப்படுகிறது. வட தமிழ்நாடு, வட கடலோர மாவட்டங்கள், வட உள்தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து நேற்றிரவு 11.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. புயல் உருவானதை தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. டிசம்பர்-10 ஆம் தேதி வரை மீனவர்கள் முற்றிலும் கடலுக்கு செல்லக்கூடாது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இடையீட்டு மனுக்கள் மீது ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!!
கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை பறித்த, மக்கள் விரோத பாஜக ஆட்சியை விரட்டிடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டம் – ஒழுங்கு பிரச்னையால் மூடப்பட்ட திரெளபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!!
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்திருக்கிறது: சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
கோவையில் பிரதமர் மோடி பேரணியில் மாணவர்கள்.. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!!
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!!
தமிழிசை ராஜினாமா செய்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக புதுச்சேரி, தெலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு!!
நாட்டின் நலன் கருதி, பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி
அதிமுக, பாஜ கூட்டணியை உறுதிப்படுத்தாத நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிந்தது: வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் தீவிரம்
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார்! 2700 போலீசார் பாதுகாப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி