முக்கிய செய்தி சென்னை வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 'மாண்டஸ்'புயலாக வலுப்பெற்றது Dec 08, 2022 வங்காள கடல் மண்டாஸ்' சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாண்டஸ் புயலானது புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. புயல் காரணமாக நாளை நள்ளிரவு முதல் காற்றின் வேகம் மணிக்கு 85 கி.மீ வேகத்தில் வீசும் என கூறப்படுகிறது. வட தமிழ்நாடு, வட கடலோர மாவட்டங்கள், வட உள்தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து நேற்றிரவு 11.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. புயல் உருவானதை தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. டிசம்பர்-10 ஆம் தேதி வரை மீனவர்கள் முற்றிலும் கடலுக்கு செல்லக்கூடாது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காந்தி நகரில் போட்டியிடும் அமித் ஷாவுக்கு சொந்தமாக கார் இல்லை; ரூ.16 லட்சம் கடன் இருக்கு..! தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்
மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊரில் ஜனநாயக கடமையாற்றிய வெளிநாடு வாழ் தமிழர்கள்..!!
400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் விமர்சனம்
முதல்கட்ட வாக்குப்பதிவில் கிடைத்த தகவல் என்.டி.ஏ. அணிக்கு சாதகமாக உள்ளன: மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
நாம் வாக்களித்தால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற எண்ணம் தான் வாக்கு சதவீதம் குறைய காரணம் : ராதாகிருஷ்ணன் விளக்கம்
பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு: பாஜகவினர் ஏமாற்றம்?
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்