அம்பத்தூர்: வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர் பவித்ரா (26), பொறியியல் பட்டதாரி. இவர், கடந்த 30ம் தேதி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தம்பி லட்சுமணனின் நண்பருக்கு தெரிந்தவர் வில்லிவாக்கம் திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சபேஷ் (24). இவர், உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதாகக் கூறி போலி அடையாள அட்டையை காண்பித்து, கடந்த மார்ச் மாதம் எங்களிடம் அறிமுகமானார். அப்போது, தனக்கு நீதிமன்றத்தில் செல்வாக்கு உள்ளதாகவும், அங்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும் சபேஷ் கூறினார். அதற்கு, ரூ.7 லட்சம் வரை செலவாகும். முதலில் ரூ.3 லட்சம் கொடுங்கள். வேலை கிடைத்தவுடன் மீதி பணத்தை தரலாம் என்றார்.