தி.நகர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது

சென்னை: மின்சாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் மின் துறை சார்ந்த பிரச்னைகள் மற்றும் கேள்விகள் குறித்து மின்சாரத்துறை தரப்பில் மின்நுகர்வோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தி.நகர் கோட்டத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது. அதன்படி, தி.நகர் கோட்டத்திற்கு எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள வள்ளுவர் கோட்டம் துணை மின்நிலையம் (மெட்ரோ குடிநீர் நிலையம் அருகில்), தி.நகர் அலுவலகத்தில் நடக்கிறது. எனவே, பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

Related Stories: