குஜராத், இமாச்சலில் இன்று ஓட்டு எண்ணிக்கை: காலை 9 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியும்

அகமதாபாத்: குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்கள் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியும். 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிச.1 மற்றும் டிச.5ம் தேதிகளிலும், 68 தொகுதிகள் கொண்ட இமாச்சலபிரதேச சட்டப்பேரவைக்கு நவ.12ம் தேதியுடம் தேர்தல் நடந்து முடிந்தது. இமாச்சலில் 76.44% வாக்குகளும்,  குஜராத்தில் முதல்கட்ட தேர்தலில் 63.31%  வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில் 65.22%  வாக்குகளும் பதிவாகி இருந்தன. இரண்டு கட்ட வாக்குப்பதிவையும் சேர்த்து 66.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இரண்டு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது.  முதலில் தபால் ஓட்டுகளும், காலை 8.30 மணிக்கு மின்னணு எந்திரங்களும் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில், காலை 9 மணிக்கு முன்னணி நிலவரம் தெரிய வரும். பகல் 12 மணிக்குள் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற விவரம் தெரிய வரும். கருத்துக்கணிப்புகளில் குஜராத்தில் மீண்டும் பா.ஜ ஆட்சி அமைக்கும் என்றும், இமாச்சலபிரதேசத்தில் இழுபறி நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: