தர்மபுரி: தர்மபுரியில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு வந்த, மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி வெங்கையா நாயுடு, எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இதனை நான் ஏற்கமாட்டேன் என தெரிவித்துள்ளார். ஆனால், அமித்ஷா போன்றோர் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காசியில் நடக்கும் தமிழ் சங்க விழாவில், தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தமிழை புகழ்ந்து பேசிய மோடியை வரவேற்கிறேன்.