நாமக்கல்: தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது என நாமக்கல்லில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 1000 பஸ்கள் வாங்க, ₹420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் நடைமுறையில் உள்ளது. பிற மாநிலங்களில் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும் கூட, தமிழகத்தில் உயர்த்தக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.