புதுடெல்லி: ஜனநாயகத்தில் தேர்தலுக்கென இருக்கும் புனித தன்மையை, அதன் செயல்முறையை தடுத்து நிறுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் சதார் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு 2 நாட்கள் முன்னதாக, மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்காக வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டனர். காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் அவர்களால் வாக்களிக்க போக முடியவில்லை,’’ என்று வழக்கறிஞர் ஒருவர் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.