விறகு அடுப்பை பற்ற வைத்தபோது உடல் கருகி பிளஸ் 1 மாணவி பலி: தந்தை படுகாயம்

புதுக்கோட்டை: விறகு அடுப்பை பற்றவைத்துபோது உடல்கருகி பிளஸ் 1 மாணவி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ரயில் நிலைய பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் சூர்யா(15). இவர், தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். வீட்டில் உள்ள விறகு அடுப்பில் சுடுதண்ணீர் போடுவதற்காக விறகு மீது மண்எண்ணெய்யை ஊற்றியுள்ளார். அப்போது அவர் மீது மண்எண்ணெய்யை பட்டு தீப்பிடித்து உடல் கருகிய அவர் கூச்சலிட்டுள்ளார்.

உடனடியாக அவரை முழுவதும் தீ பரவியதால் அவர் அலறினார். இதைப்பார்த்து அதிர்ச்சி தந்தை பன்னீர்செல்வம் சாக்குபையை கொண்டு தீயை அணைக்க முயன்ற போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: