புதுக்கோட்டை: விறகு அடுப்பை பற்றவைத்துபோது உடல்கருகி பிளஸ் 1 மாணவி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ரயில் நிலைய பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் சூர்யா(15). இவர், தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். வீட்டில் உள்ள விறகு அடுப்பில் சுடுதண்ணீர் போடுவதற்காக விறகு மீது மண்எண்ணெய்யை ஊற்றியுள்ளார். அப்போது அவர் மீது மண்எண்ணெய்யை பட்டு தீப்பிடித்து உடல் கருகிய அவர் கூச்சலிட்டுள்ளார்.