×

ஓவிய, சிற்பத் துறையில் சிறந்த கலையாசிரியர்கள் மற்றும் நூலாசிரியர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்குதல்: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: கலை பண்பாட்டுத்துறை நுண்கலைப்பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான மரபுவழி / நவீனபாணி பிரிவில் ஓவிய-சிற்பக் கலைக்காட்சிகளை நடத்தி, சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கியும், மாநில அளவில் கலைச்செம்மல் விருதும் வழங்கி  கலைஞர்களை  ஊக்குவித்து வருகிறது.

தமிழகத்தில் ஓவிய, சிற்பக் கலைத்துறையில் சிறந்து விளக்கும்  ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாண்டு முதல் 10 கலையாசிரியர்களுக்கு தலா ரூ.10,000/- வீதமும், ஓவியம், சிற்பக் கலைப்பிரிவில் சிறந்த கலை நூல்களை பதிப்பித்த நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 கலை நூல் ஆசிரியர்களுக்கு ரூ.10,000/-வீதமும் பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள ஓவியக்கலை மற்றும் சிற்பக் கலை ஆசிரியர்களிடமிருந்தும்,  ஓவிய, சிற்பக் கலைப்பிரிவில் நூல்களை பதிப்பித்த நூலாசிரியர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் பின்வரும் விதிமுறைகளின்படி வரவேற்கப்படுகின்றன.

* ஓவிய, சிற்பக்கலை ஆசிரியர்கள் தங்களின் புகைப்படத்துடன் (Passport Size Photo) கூடிய தன்விவரக் குறிப்புடன் (பெயர், பிறந்த தேதி, கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதிகள், அனுபவம்,  இதுவரை பெற்ற விருதுகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களுடன்) கூடிய விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.
* ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்பிரிவில் கலை நூல்கள் பதிப்பித்துள்ள நூலாசிரியர்கள் தங்களின் புகைப்படத்துடன் (Passport Size Photo) கூடிய தன்விவரக் குறிப்புடன் பெயர், பிறந்த தேதி, கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதிகள், அனுபவம்,  இதுவரை பெற்ற விருதுகள், சான்றிதழ்கள், பதிப்பித்த நூல் ஆகியவற்றினை இணைத்து  அனுப்பி வைக்க  வேண்டும்.
* கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தெரிவுக்குழுவின் மூலம்  சிறந்த கலையாசிரியர்கள் மற்றும் சிறந்த கலை நூலாசிரியர்கள் தேர்வு  செய்யப்படுவர்.

மேற்காணும் விவரங்களின் அடிப்படையில் உரிய தன் விவரக்குறிப்புடன்  கூடிய விண்ணப்பங்களை
இயக்குநர்,
கலை பண்பாட்டுத்துறை,
தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம்,
தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 002.
தொலைபேசி எண்.28193195, 28192152
என்ற முகவரிக்கு 23.12.2022-க்குள் அனுப்பிவைக்க வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Best Art Writers, Writers in the field of Painting, Sculpture, Appreciation Certificate, Applications welcome`
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...