×

ஸ்ரீசத்ய மாவட்டத்தில் பக்கத்து வீட்டின் அருகே வாஷிங் மெஷின் வைத்த விவகாரத்தில் பெண் அடித்து கொலை

*தந்தை, மகன் மீது வழக்கு

திருமலை :  ஸ்ரீசத்ய மாவட்டத்தில் பக்கத்து வீட்டின் அருகே வாஷிங் மெஷின் வைத்த விவகாரத்தில் தந்தையும், மகனும் பெண்ணை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீசத்ய மாவட்டம் கதிரி நகர் அடுத்த மாசானம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி பத்மாபாய். இவர்கள்  வீட்டின் அருகே பிரகாஷ் நாயக்கும், அவரது மகன் வேமன்ன நாயக்கும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை பத்மாபாய்  வீட்டின் வாஷிங் மெஷினை பிரகாஷ் நாயக்கின் வீட்டின் அருகே வைத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்,  ஆத்திரமடைந்த தந்தையும், மகனும் பத்மாபாயை கத்தி மற்றும் கம்பிகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பத்மாபாய் ரத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே சரிந்து மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கதிரிநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இதனிடையே, பத்மா பாய் உடல்நிலை கவலைக்கிடமானதால் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கதிரிநகர் காவல் நிலைய போலீசார் பிரகாஷ் நாயக்கும், அவரது மகன் வேமன்ன நாயக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாஷிங் மிஷின் வைத்த விவகாரத்தில் தந்தையும், மகனும் பெண்ணை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Srisatya district , Thirumalai: A father and son beat a woman to death over a washing machine near a neighboring house in Srisatya district.
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...