திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே சினிமா பாணியில் கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது. ஓடும் காரை கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டது. காரை நிறுத்தாமல் சென்றதால் நகை வியாபாரி தப்பினார். சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.