டெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35% ரிசர்வ் வங்கி உயர்த்தியது. ரிசர்வ் வங்கி 2 ஆண்டுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை சீராய்வு கூட்டம் நடத்தி வட்டி விகிதம் உட்பட பல்வேறு கொள்கை முடிவுகளை எடுக்கிறது. எந்த வகையில் கடந்த 5ம் தேதி முதல் 7ம் தேதிவரை நிதிக் கொள்கை சீராய்வு கூட்டம் நடந்தது. இதில் நாட்டின் பணவீக்கம் உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்; வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35% ரிசர்வ் வங்கி உயர்த்தியது.