×

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்கும் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்த கூட்டத்தொடர். இது ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டும். ஜி - 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது என்று குறிப்பிட்டார்.


Tags : Parliament ,Narendra Modi , Parliament Winter Session, Cooperation, Prime Minister Modi
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...