சென்னை: தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணியிடம் ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள ஐபோனை திருடிய கொள்ளையனை விரட்டி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். தாம்பரம் காவல் நிலைய குற்ற பிரிவில் காவலராக காளீஸ்வரி பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4ம் தேதி தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணி மேற்கொண்டார். அப்போது, கூடுவாஞ்சேரி செல்லும் மாநகர பேருந்தில் வடமாநில இளைஞர் ஒருவர் ஏறி, பின்னர் சிறிது நேரத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள ஐபோனை பறித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.