சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை 9ம் தேதி வெளியாகும்

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் படிக்கின்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை 9ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் 34 லட்சம் மாணவ-மாணவியர் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம்  வகுப்பு தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 18 லட்சம் பேர் 10ம் வகுப்பு தேர்வுக்கும், 16 லட்சம் பேர் 12ம் வகுப்பு தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வு அட்டவணையை எதிர்பார்த்துள்ளனர். தற்போது, 9ம் தேதி தேர்வு அட்டவணையை வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன் படி 9ம் தேதியே சிபிஎஸ்இ இணைய தளத்தில் வெளியாகலாம். தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தேர்வு அட்டவணையை தெரிந்து கொள்வது என்றும் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: