சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.406 கோடி மதிப்பீட்டில் 4,644 குடியிருப்புகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு வீடு மற்றும் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோட்டில் 1176 குடியிருப்புகள், கோயம்புத்தூர் 1120 வீடுகள், மதுரையில் 912 குடியிருப்புகள், புதுக்கோட்டை 384 வீடுகள், திருப்பூர் 380 வீடுகள், கரூர் 288 வீடுகள், கடலூர் 240 குடியிருப்புகள், சேலம் 144 குடியிருப்புகள் என ரூ.406 கோடியில் 4,644 குடியிருப்புகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதையடுத்து குடியிருப்புகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.