சென்னை: சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் 30 குற்றச்செயல் வழிமுறை விளக்கபுத்தகத்தில் மேலும் 3 செயல்கள் சேர்க்கப்ட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி வாயிலாக பண மோசடி, காவல் அதிகாரிகள் போன்று மிரட்டி பணம் பறிக்கும் மோசடி சேர்க்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கிலிருந்து தவறுதலாக பணம் டெபிட் ஆனதாக கூறி மோசடி ஆகியவை விழிப்புணர்வு புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. முத்துவும் 30 திருடனும் என்ற விழிப்புணர்வு புத்தகத்தை சென்னை காவல்துறை நவம்பரில் வெளியிடப்பட்டிருந்தது.