டெல்லி: ஜல்லிக்கட்டு என்பது மிகவும் பாதுகாப்பான முறையில், காளைகளுக்கு துன்பம் விளைவிக்காமல் நடத்தப்படுகிறது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தரப்பு வாதம் தெரிவித்தனர்.
தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் தான் நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றம் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்துள்ளது.