தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஆன்லைனில் தேர்தலை நடத்துவது குறித்து விதிகளை வகுக்கவும் மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மருத்துவ பதிவு சட்டமும், விதிகளும் மூன்று மாதங்களில் திருத்தப்படும் எனவும் தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. சட்டம், விதிகளை திருத்தும் செய்வதற்கு அவகாசம் அளித்து 3 மாதங்களுக்கு தேர்தலை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Related Stories: