டெல்லி: ரிசர்வ் வங்கியின் நிதி நிர்வாக அறிக்கை நாளை வெளியாக உள்ள நிலையில் வட்டி விகிதம் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பணவீக்க விகிதம் குறைந்துள்ளதால் குறுகிய கால கடனுக்கான வட்டி விகித உயர்வு பெரிதாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் வங்கி வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.35 சதவீதம் உயர்த்தக்கூடும் என்று கூறியுள்ளனர். 3 பொருளாதார நிபுணர்கள் வங்கி வட்டி விகித உயர்வு 0.25 சதவீதமாக இருக்கும் என்றும் ஒரே ஒரு நிபுணர் 0.5 சதவீதம் வரை இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க மத்திய வங்கியும் குறைந்த அளவுக்கே வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை ஒட்டியே இந்தியாவிலும் வட்டி விகித உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.