கிருஷ்ணகிரி: திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், வீரத்தியாகி திப்புசுல்தான் மாநில பேரவை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பங்கேற்று பேசியதாவது: 2024 நாடாளுமன்ற தேர்தல் சராசரி தேர்தல் அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம், மத நல்லிணக்கத்தை பாதுகாக்கப் போகிறோமா இல்லையா, இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சகோதரத்துடன் இந்த மண்ணில் வாழ வேண்டுமா? இல்லையா என்ற கேள்விகளுக்கு விடை காணக்கூடிய தேர்தல். எனவே, அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்.