சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை கண்டித்து, சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி சார்பில், ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடைகோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை கண்டித்து சைதாப்பேட்டை பனகல் கட்டிடம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்து. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் பொன்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் என்.சுந்தர்ராஜ், இணைப் பொதுச் செயலாளர்கள் ஜெகதீசன், மூர்த்தி, கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகமுருகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.