சென்னை உள்பட 15 மாவட்டங்களில் குரூப்-3ஏ பதவிக்கான எழுத்துத்தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப்-3ஏ பதவிக்கான எழுத்து தேர்வு சென்னை, காஞ்சிபுரம் உள்பட 15 மாவட்டங்களில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு(குரூப் 3ஏ) பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்து தேர்வு ஜனவரி 28ம் தேதி முற்பகல் 38 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த எழுத்து தேர்வு நிர்வாக காரணங்களால் தற்பொழுது சென்னை, மதுரை, கடலூர், காஞ்சிபுரம், நாகர்கோவில், கோவை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், உதகமண்டலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 15 மாவட்ட தேர்வு மையங்களில் மட்டும் குறிப்பிட்ட தேர்வு நாள் அன்று நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: